search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தகோரி நாய் உருவ முகமூடி அணிந்து வந்த கவுன்சிலர்
    X

    நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி கவுன்சிலர்கள் கூட்டாக மனு அளித்தனர்.

    தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தகோரி நாய் உருவ முகமூடி அணிந்து வந்த கவுன்சிலர்

    • திருவிழா நடைபெற இருப்பதால் கழிவுநீரை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
    • திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் சண்முகப்பிரியா தலைமை யில், ஆணையர் குமரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    நாடிமுத்து: எனது பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கைகளை ஏற்று பட்டா மாறுதல் 150 நபருக்கு மேல் ஒரே நாளில் ஆன்லைனில் ஏற்றப்பட்டு ள்ளதற்கு நன்றி.

    ராயல்குமார் : நீண்ட கோரிக்கைக்கு பிறகு எனது வார்டில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கபட்டுள்ளது.

    ஆனால் அதற்கு ஆட்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவா தியேட்டர் சிமெண்ட் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும்.

    ரவிக்குமார் : பெருமாள் கோவில்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு தேங்கிய கழிவுநிறையால் சாக்கடை யாகி துர்நாற்றம் வீசுகிறது. திருவிழா நடைபெற இருப்பதால் அதனை அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டும்.

    மகாலட்சுமி : எனது வார்டில் நகராட்சி வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. துப்புரவு பணி மிக மோசம்.

    ஆணையர் : பட்டுக்கோட்டை நகராட்சிக்கு கழிவுநீர் எடுப்பதற்கு இரண்டு வாகனம் ஒப்புதல் அளிக்கப்ப ட்டுள்ளது. விரைவில் அதற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    சரவணன் : எனது வார்டில் உள்ள நகராட்சிக்கு பள்ளிக்கு எதிரே உள்ள ஆற்றங்கரையில் சிறிய வகை பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் இணைப்பு அனுமதி பெறாமல் வைத்துள்ள வர்களின் இணைப்புகள் துண்டிக்க ப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நலத்திட்ட பணியாளர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர் என்ற வெள்ளை அறிக்கை வேண்டும்.

    சுரேஷ் : எனது வார்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட சாலை வேறு பகுதியில் போடப்பட்டது ஏன்?

    பொறியாளர் நகராட்சி தீர்மானத்தில் அறிவிக்க ப்பட்டுள்ள பகுதியில் தான் சாலை போடப்பட்டுள்ளது. உங்களின் கோரிக்கை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும்.

    ராமலிங்கம் : மழைக்காலத்திற்கு முன்னதாக எனது வார்டில் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும்.

    கலையரசி : நாடிஅம்மன் கோவில் சாலையில் மாடுகள், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருக்கிறது. நாடியம்மன் கோவில் குளத்தினில் குடியிருப்பு வாசிகள் கழிவுநீர் பைப்பு இணைத்துள்ளார்கள். அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

    சதாசிவகுமார் : ஏழை எளிய மாணவ -மாணவிகள் போட்டி தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் எனது வார்டில் ஒரு பயிற்சி மையத்தை நகராட்சி சார்பில் ஏற்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் இன்னும் சாலை வசதி இல்லா மலும், தெருவிளக்குகள் இல்லாமலும் உள்ளதை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

    ஆணையர் : ஒரு கோடியே 16 லட்சம் செலவில் ஆர்.வி நகர் பகுதியில் அறிவுசார் நிலையம் அமைக்கப்ப ட்டுள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் இளைஞர்களுக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணி முடிந்து திறப்பு விழா காணப்படும்.

    பிரபாகணி : எனது வார்டில் சாலை அமைத்ததற்கு நன்றி. கழிவுநீர் வாய்க்கால் என்னவாயிற்று. தெரு விளக்கு பராமரிப்பு மிக மோசம்.

    பொறியாளர் : பழைய ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டு ஐந்து உள்ளூர் நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு பகுதியின் அடிப்படையும் புரியவில்லை. விரைவில் அதுவும் சரி செய்யப்படும்.

    புதிதாக தெரு விளக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். எனது வார்டுக்கு எப்பொழுது எவ்வளவு விளக்கு ஒதுக்குவீர்கள்.

    பொறியாளர் : கட்டாயம் திங்கட்கிழமைக்கு மேல் ஒவ்வொரு வார்டுக்கும் 5 விளக்குகள் வழங்கப்படும்.

    நளினி : எனது வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு இடையூறாக வைக்கப்ப ட்டுள்ள மின்கம்பத்தை நீக்க வேண்டும்.

    முடிவில் நகரமன்ற கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒற்றை கோரிக்கையாக தங்கள் வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முன்வைத்து பேசி கோரிக்கை மனுவினை வழங்கினர் .

    குறிப்பாக பட்டுக்கோட்டை 19-வது வார்டு, அ.தி.மு.க கூட்டணி கட்சியில் உள்ள த.மா.கா கட்சியின் நகரமன்ற உறுப்பினர் நாடிமுத்து நாய் முகமூடி அணிந்தும், நாய் படங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் மாட்டிய படியும் நகர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பரபரப்பினை ஏற்படுத்தி னார்.

    நாடிமுத்து நகர்மன்ற கூட்டத்தில் பேசும் பொழுது , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் குவியும் பொதுமக்கள், நாயால் கடிக்கப்பட்டு, நாயின் மீது மோதி விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

    பட்டுக்கோட்டையில் எந்த ஒரு பகுதிக்கும் பொதுமக்கள் இயல்பாக சென்று வர முடியாத அளவிற்கு கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் திரிவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக கூறினார்.

    தான் நகர்மன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை வைம் இந்த நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஒருவேளை நாயை பிடிப்பதற்கு யாரேனும் தடை விதித்தால் அவர்களிடம் அனுமதி வாங்கி தெருநாய்களை பிடித்துக் கொண்டு அவர்கள் இல்லத்தில் விட்டு பராமரிக்க சொல்வதற்கு ஆகும் மொத்த செலவையும் தான் ஏற்று கொள்வதாகவும் கூறினார் .

    Next Story
    ×