என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழு
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க சிறப்பு குழு

    • நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.
    • மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.

    தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு:-

    1. ஐஸ்வர்யா இஆப கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830.

    2. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி தொலைபேசி எண். 9943744803 3. அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155 உதவியாளர் (பொது).

    இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைக்க அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப தொலைபேசி எண். 9442218000.

    அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

    1. கிஷன் குமார். இஆப உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி தொலைபேசி எண் 9123575120 2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி. தொலைபேசி எண் 9940440659. இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    Next Story
    ×