என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை வெளியிட வேண்டும்.
- ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி மண்டல வாணிப அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜனதாவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களின் விவரங்களை ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்று பேசுகையில், நாட்டில் தன்னாட்சி பெற்ற அமைப்புகளை மோடி தனது கைப்பாவையாக வைத்துள்ளார். டிஜிட்டல் இந்தியாவில் உடனுக்குடன் தரவுகளை எடுக்க முடியும். ஆனால் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை சமா்ப்பிக்க 4 மாதங்கள் ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டுள்ளது. ஸ்டேட் வங்கி இப்படி கூற பிரதமர் நரேந்தி ரமோடி அளித்துள்ள அழுத்தமே காரணம். எனவே கால அவகாசம் இன்றி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், டாக்டர் சிவக்குமார், மண்டல தலைவர் சிவபிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்