search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் தாலுகாக்கள் முழுமையாக பாதிப்பு
    X

    வெள்ளத்தால் தாலுகாக்கள் முழுமையாக பாதிப்பு

    • நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பெய்த அதி கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் பொருட்களை நிவாரணமாக வழங்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட வழங்கல் துறை மூலமாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொருட்கள் வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார், நெல்லை, அம்பை மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களாக நெல்லை, பாளை, சேரன்மகாதேவி ஆகியவை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, மானூர் உள்ளிட்ட வட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 16 கிராமங்களும், நாங்குநேரியில் 30 கிராமங்களும் என தனித்தனியாக பாதிப்பு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலைக்குள் மாவட்டம் முழுவதும் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், அதன் அடிப்படையில் அரசு அறிவித்த நிவாரண தொகை எந்தெந்த கிராமங்களுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×