இரு கலைக் கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள 2 அரசு கலைக் கல்லூரிகளுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கரூர் மாவட்டத்தின் குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ‘டாக்டர் கலைஞர்’ அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு  ‘கலைஞர் கருணாநிதி’ அரசு மகளிர் கலைக் கல்லூரி எனப் பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com