search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் உற்பத்தியை பாதிக்கும் எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் விவசாயிகள்
    X

    நெல் உற்பத்தியை பாதிக்கும் எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் விவசாயிகள்

    • கிராமங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.
    • நடவு பணிகள் முடிவுற்று 2 மாத காலத்தில் நெற்பயிர்களில் நெல் மணிகள் உருவாக தொடங்கும்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஆண்டு தோறும் 10 மாதங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதால் இரு போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோபி மற்றும் அதைச்சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் உற்பத்தி நடைபெறுவது வழக்கம்.

    நடவு பணிகள் முடிவுற்று 2 மாத காலத்தில் நெற்பயிர்களில் நெல் மணிகள் உருவாக தொடங்கும் நேரத்தில் வயலுக்குள் புகும் எலிகள் நெற்பயிர்களை முழுமையாக சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது.

    நெல் வயல்களில் எலிகளை அழிப்பதற்காக ரசாயண மருந்துகளை பயன்படுத்தினால் நெற்பயிர்களும், மண்ணின் தன்மையும் விஷமாக மாறும் அபாயம் இருப்பதால், எலிகளை பிடிப்பதற்கு ரசாயண மருந்துகளை பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிட்டி வைத்தல் என்ற முறையில் விவசாயிகள் எலிகளை பிடித்து நெற்பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராகி வரும் வயல்களில் நெற்பயிர்களை சேதபடுத்தி வரும் எலிகளை விவசாயிகள் கிட்டி அமைத்து பிடித்து வருகின்றனர்.

    Next Story
    ×