search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி- தி.மு.க.வுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை
    X

    விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி- தி.மு.க.வுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை

    • 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.
    • கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி இன்று மாலையில் தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதியம் 3 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் 5 மணிக்கு கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்த முறை அதே தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அல்லது தொகுதி மாற்றி கொடுக்கப்படுமா? என்பது இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் தெரியவரும்.

    இதற்காக 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.

    Next Story
    ×