என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமத்துவத்திற்கான குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சி.எஸ்.ஐ. பேராயர் வாழ்த்து
    X

    சமத்துவத்திற்கான குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சி.எஸ்.ஐ. பேராயர் வாழ்த்து

    • பல ஏழைகளுக்காகவும், இல்லாதோர், கல்லாதோர் ஆகியோருக்கு தொடர்ந்து துணை நிற்பவர் நமது முதலமைச்சர்.
    • மு.க.ஸ்டாலின் குரல் தொடர்ந்து சமத்துவத்துக்காகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக இதே துணிச்சலோடு ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னிந்திய திருச்சபை சென்னைப் பேராயர் ஜெ.ஜார்ஜ் ஸ்டீபன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    70-வது பிறந்த தினத்தை கொண்டாடும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக தாம் பிரார்த்தனை ஏறெடுப்பதாகவும், கடவுள் அவருக்கு இன்னும் நல்ல உடல் சுகத்தை தர வேண்டும்.

    பல ஏழைகளுக்காகவும், இல்லாதோர், கல்லாதோர் ஆகியோருக்கு தொடர்ந்து துணை நிற்பவர் நமது முதலமைச்சர். அவரது குரல் தொடர்ந்து சமத்துவத்துக்காகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக இதே துணிச்சலோடு ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    இப்படிப்பட்ட மக்களுக்கு பல நன்மைகளை செய்ய முற்படும்போது வரும் பல இன்னல்களை எதிர்கொள்ள அவருக்கு வேண்டிய துணிச்சலும், ஞானமும் மென்மேலும் அவருக்கு கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு இந்த பிறந்தநாளின் வழியாக இத்தகைய எல்லா ஆசிகளையும் வழங்க தென்னிந்திய திருச்சபையின் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×