என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு வைத்து மான்களை வேட்டையாடிய 2 பேர் கைது
- புதர்களுக்கு அடியில் மறைந்து இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- 2 பேரை கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனசரகர் சிவகுமார் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வரப்பள்ளம் என்ற பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலின் இடது புறம் கரையில் ரோந்து சென்றார். அப்போது புதர்களுக்கு அடியில் மறைந்து இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பவானிசாகர் குடில் நகரை சேர்ந்த ஓதிச்சாமி (58), தினேஷ்குமார் (46) என்று தெரியவந்தது. மேலும் இவர்கள் சுருக்கு வைத்து 2 புள்ளிமான்களை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சிகளை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து மான் இறைச்சிகள்,2 மான் தலைகள், மானின் கால்கள், சுருக்கு கம்பி, வெட்டு அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்