search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு வைத்து மான்களை வேட்டையாடிய 2 பேர் கைது
    X

    பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு வைத்து மான்களை வேட்டையாடிய 2 பேர் கைது

    • புதர்களுக்கு அடியில் மறைந்து இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • 2 பேரை கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனசரகர் சிவகுமார் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வரப்பள்ளம் என்ற பகுதியில் உள்ள கீழ் பவானி வாய்க்காலின் இடது புறம் கரையில் ரோந்து சென்றார். அப்போது புதர்களுக்கு அடியில் மறைந்து இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பவானிசாகர் குடில் நகரை சேர்ந்த ஓதிச்சாமி (58), தினேஷ்குமார் (46) என்று தெரியவந்தது. மேலும் இவர்கள் சுருக்கு வைத்து 2 புள்ளிமான்களை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சிகளை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து மான் இறைச்சிகள்,2 மான் தலைகள், மானின் கால்கள், சுருக்கு கம்பி, வெட்டு அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×