மணப்பாடு பள்ளியில் விளையாட்டு விழா

உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைபள்ளி, புனிதமரியன்னை நடுநிலை பள்ளிகளில் விளையாட்டு விழா பள்ளியின் முன்னாள் மாணவரும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியின் பேராசிரியருமான பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் வலம் வருதல், ஒலிம்பிக் கொடி ஏற்றுதல், விளையாட்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது.
 விழாவில் ஒலிம்பிக் தீபம் கொண்டு செல்லப்பட்ட காட்சி.
 விழாவில் ஒலிம்பிக் தீபம் கொண்டு செல்லப்பட்ட காட்சி.
Published on

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைபள்ளி, புனிதமரியன்னை நடுநிலை பள்ளிகளில் விளையாட்டு விழா பள்ளியின் முன்னாள் மாணவரும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியின் பேராசிரியருமான பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியை பிளாரன்ஸ், புனித மரியன்னை நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியை எலிசா டிரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித யாகப்பர் ஆலய கமிட்டி தலைவர் திபுர்சியான், தூய ஆவி ஆலய கமிட்டி தலைவர்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்கள் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் வலம் வருதல், ஒலிம்பிக் கொடி ஏற்றுதல், விளையாட்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. ஆண்கள்4 அணியாகவும், பெண்கள் 4அணியாகவும் போட்டிகள் நடைபெற்றது. இதில் தாசன் அணி ஆண்களில் முதல் இடத்தையும், ரோச் அணி பெண்களில் முதல்இடத்தையும் பெற்றது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழாத்தலைவர் பரிசுகள் வழங்கினார்.உடற்கல்வி ஆசிரியை உஷா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com