search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா கடத்தல் கும்பலை பெங்களூருவில்  கைது செய்த சேலம் தனிப்படை போலீசார்
    X

    குட்கா கடத்தல் கும்பலை பெங்களூருவில் கைது செய்த சேலம் தனிப்படை போலீசார்

    • சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தனர்.
    • இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தவர்கள் குறித்த தகவல் அறிந்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்கா ராம்ஜி மகன் கீமா ராம் (வயது 28), தாபா ராம் மகன் ராஜேஷ் குமார் (25), ராஜாராம் மகன் ஜலராம் (38) ஆகிய 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சேலம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×