search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலப்பணி மீண்டும் தொடக்கம்
    X

    நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலப்பணிகள்.

    நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலப்பணி மீண்டும் தொடக்கம்

    • ராமநாதபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலப்பணி மீண்டும் தொடங்குகிறது.
    • 1 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரிலிருந்து சக்கரக்கோட்டை வழியாக திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை செல்லும் வகையில், 2018-ம் ஆண்டு ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேம்பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

    இந்த பணிகள் 40 சதவீதம் முடிந்த நிலையில், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியாா் பெட்ரோல் நிலையம் உள்ளிட்ட தனியாா் கட்டிடங்களை அகற்றினால் பாலம் முழுமையாக அமையும் நிலை ஏற்பட்டது. இதனால் மேம்பாலப் பணிகளுக்குத் தடை கோரி கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளாக பாலப் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில், ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் பாலப்பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டாா். தடை கோரி வழக்குத் தொடா்ந்தவா்களை அழைத்து கோட்டாட்சியா் சேக்மன்சூா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து நீதிமன்றத்துக்கு சென்றவா்கள், வழக்கை திரும்பப் பெற சம்மதித்தனர்,

    இது குறித்து த.மு.மு.க, மாநில செயலாளர் சலிமுல்லாகான் கூறியதாவது:-

    தற்போது மேம்பாலம் கட்டும் பகுதியில் எங்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்தப் பகுதி அரசு நிர்ணயித்த தொகை குறைவாக இருந்தது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த வாரம் எனது நண்பர் கீழக்கரை ஹசன் சென்னையில் இருந்து ராமநாதபுரம் ரெயிலில் வந்தபோது பாலம் கட்ட தாமதமாவதால் மக்கள் படும் சிரமத்தை எடுத்துக் கூறி வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெற்று கைெயழுத்திட்டோம்.

    இடத்தின் மதிப்புக்கு பணம் கிடைக்கவில்லை.மக்களின் விலை மதிப்பற்ற மகிழ்ச்சியை உயர்வாக கருதுகிறேன். இன்னும் 1 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×