வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலியானார்
வாகனம் மோதி முதியவர் பலி
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் கவுல்பாளையத்தில் ஒரு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே முதியவர் ஒருவர் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் முழுக்கை சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com