search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாஜக மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கட்சிக் கொடியேற்றி  நிர்வாகிகள் சந்திப்பு
    X

    பாஜக மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் சார்பில் கட்சிக் கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு

    • தமிழ் இலக்கிய ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஏற்பாட்டில் கொடூர் கிருஷ்ணாபுரத்தில் கட்சி கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
    • பொன்னேரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கிளைகளில் கொடி கம்பம் அமைத்து கட்சி கொடியேற்றுமாறு மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்ததை அடுத்து மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் தமிழ் இலக்கிய ஒன்றிய தலைவர் பாஸ்கரன் ஏற்பாட்டில் கொடூர் கிருஷ்ணாபுரத்தில் கட்சி கொடியேற்றி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.

    இதில்ஆன்மீகப் பிரிவு மாநில செயலாளர் குமார், பட்டியல் அணி மாநிலசெயலாளர் அன்பாலயா சிவகுமார், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா பட்டியல் அணிமாவட்ட தலைவர் வேலவன், மாவட்டத் துணைத் தலைவர் பரமானந்தம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் மகேஸ்வரி மாவட்ட செயலாளர் கோட்டி, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு, பொன்னேரி நகரத் தலைவர் சிவக்குமார், மாவட்ட தமிழ் இலக்கிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், பட்டியல் அணி பொதுச் செயலாளர் இளங்கோவன், நகர பொதுச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் பாலாஜி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×