சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம்

வெல்வது மற்றும் தோல்வி அடைவது எப்படி என்று குறித்து கற்றுக்கொள்வது.மாணவ-மாணவிகள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்கல்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபப்பட்டது.
Published on

சுவாமிமலை:

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

சதுரங்கம் விளையாடும் போட்டியானது பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவி்களை ஒன்றிணைப்பதுடன் வெல்வது மற்றும் தோல்வி அடைவது எப்படி என்று கற்றுக் கொள்வது கற்றுக் கொடுக்கிறது குழந்தைகள் தங்கள் செயல்களின் விளைவுகளை உணர உதவுகிறது.

கவனத் திறமையை அதிகரிக்க உதவுகிறது. இவ்வாறான போட்டியை ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயனுக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவி்களுக்கு பதக்கங்களை வழங்கி கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளும் வெற்றியாளர்களே என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com