search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளி பஸ் மோதி குழந்தை பலி
    X

    தனியார் பள்ளி பஸ் மோதி குழந்தை பலி

    • தனியார் பள்ளி பஸ் மோதி 1½ குழந்தை நசுங்கி பலியானது.
    • தனியார் பள்ளி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையை அடுத்துள்ள பெருங்குடியை சேர்ந்தவர் உத்தமநாதன். இவர் அதே பகுதியில் விறகு கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் வீரசக்தி என்ற 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிப்பது தொடர்பாக உத்தமநாதன், தனது மனைவி, குழந்தை களுடன் மதுரை ரேஸ்கோர்சில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு நேற்று காலை எலக்டரிக் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு ஆதார் பணிகளை முடித்துவிட்டு மாைலயில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    வில்லாபுரம் தியேட்டர் அருகே வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த தனியார் பள்ளி பஸ் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உரசி சென்றது.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து கீழே சரிந்தது. அதில் பயணம் செய்த உத்தமநாதன் தனது மனைவி, குழந்தை யுடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் குழந்தை வீரசக்தி மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி பச்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பெற்றோர் துடித்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்துகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தனியார் பள்ளி பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×