search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
    X

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார். அருகில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் மற்றும் பலர் உள்ளனர். 

    அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

    • மின் கட்டணத்தை எதிர்த்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • இதில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

    பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    அவர் பேசுகையில், பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு அனுதினமும் மக்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு தற்போது மின்சார கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

    இதை கண்டித்து வருகிற 25-ந் தேதி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பாயூரணி பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலு சேர்க்கும் வகையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தி.மு.க. பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார் வட்டச் செயலாளர் என்.எஸ்.

    Next Story
    ×