சாலை விபத்தில் முதியவர் சாவு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சாலை விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சாலை விபத்தில் முதியவர் சாவு
Published on

கரூர்

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 71). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் பெட்ரோல் போடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்த சின்னச்சாமி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சின்னச்சாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து சின்னச்சாமியின் மனைவி காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com