search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே ரெயில் மோதி காண்டிராக்டர் பலி
    X

    நெல்லை அருகே ரெயில் மோதி காண்டிராக்டர் பலி

    • பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நெல்லை முன்னீர்பள்ளம் மேல கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39), கட்டிட காண்ட்ராக்டர்.

    இவர் நேற்றிரவு மேலப் பாளையம் பகுதி யில் ரெயில்வே தண்டவாளம் அருகே இருந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து ஆறுமுகம் சாப்பிட்டு உள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பலியானது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் ஆகி யோர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். பின்னர் பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நாகர் கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். பலியான ஆறுமுகத்திற்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காண்ட்ராக்டர் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×