என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    • மழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து நீடிக்கும் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்ததால் பள்ளிளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழைக் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்றுமுதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×