search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசு கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
    X

    காேப்புபடம்

    அரசு பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசு கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

    • விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
    • அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    திருப்பூர்,

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஒ.சுந்தரமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: -

    தமிழகம் முழுவதும் 2021-22 ம் ஆண்டுக்கான பொதுத் தோ்வுகள் முடிவடைந்து விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.இதைத் தொடா்ந்து, 2022- 23 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

    இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவா்கள் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாா் கல்லூரிகளில் சேர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை சான்றிதழ்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இந்தச் சான்றிதழ்களை சமா்ப்பிக்கும் மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளில் கலை, அறிவியல், கணினி போன்ற பாடப் பிரிவுகளில் சேர அனுமதிக்க வேண்டும்.அதேபோல, அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×