search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் அருகே வீட்டில் குட்கா பதுக்கி விற்ற தந்தை-மகன் கைது
    X

    மதுராந்தகம் அருகே வீட்டில் குட்கா பதுக்கி விற்ற தந்தை-மகன் கைது

    • வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கு ஏராளமான குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் சித்தாமூரில் மளிகை கடை நடத்தி வரும் வசந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மகன் மோகன் ஆகியோர் அங்குள்ள வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சீனிவாசன், மோகன் ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    வண்டலூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் குட்கா பதுக்கி விற்ற கேரளாவை சேர்ந்த முகமது உசேனை ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் (47) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×