search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் தந்தை-மகள் உயிரிழப்பு
    X

    குடும்ப தகராறில் தந்தை-மகள் உயிரிழப்பு

    • வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை.
    • குழந்தை படுக்கையில் இறந்த நிலையில் இருந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், சியாத்தமங்கை ஊராட்சி, மேலிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மாரிமுத்து (வயது 35) கூலித்தொழிலாளி.

    இவருக்கும் நன்னிலம் மாப்பிள்ளை குப்பம் தட்டாத்திமூலை பகுதியை சேர்ந்த தீபா (வயது 30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி ருத்ரா (வயது 4) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மாரிமுத்து தீபாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தீபா தனது குழந்தை ருத்ராவுடன் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி தீபாவை சமா–தானம் பேசி அழைத்து வர மாரிமுத்து சென்றுள்ளார். தீபா வர மறுத்ததால் குழந்தை ருத்ராவை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை தனது தாயரிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் தீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மாரிமுத்து திருமருகல் கடைத்தெருவுக்கு வருமாறும் அங்கு வந்து குழந்தையை தருகிறேன் எனக்கூறி உள்ளார்.

    இதையடுத்து தீபா திருமருகலுக்கு வந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் மாரிமுத்தும், குழந்தையும் வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டும் பதில் இல்லை.

    இதையடுத்து தீபா ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்த–போது மாரிமுத்து தூக்கில் தொங்கியபடியும், குழந்தை படுக்கையில் இறந்த நிலையிலும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா சத்தமிட்டு அலறினார்.அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் மாரிமுத்து, ருத்ரா ஆகியோரின் உடலை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து மாரிமுத்துவின் தந்தை ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது குழந்தை தனது தாயிடம் செல்ல வேண்டுமென தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாலும், மறுபக்கம் மாரிமுத்துவின் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்ததாலும் ஆத்திரத்தில் குழந்தையை துணியால் முகத்தை மூடி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தனர்.

    குடும்ப தகராறில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×