search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி - குடிமங்கலத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
    X
    திரவுபதி முர்மு வெற்றி பெற்றதை பா.ஜ.க.வினர் கொண்டாடியபோது எடுத்தபடம்.  

    ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி - குடிமங்கலத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

    • துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.
    • பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    மடத்துக்குளம்:

    ஜனாதிபதி தேர்தலில் பாஜக. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதையடுத்து குடிமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார். இந் நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் கே.மோகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல தலைவர் பங்காரு நாராயணசாமி முன்னிலை வகித்தார்.மண்டல துணைத் தலைவர்கள் சி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.பாபு என்கிற பால்ராஜ் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மண்டல பொதுச் செயலாளர் யூ.மனோஜ்குமார், சந்திரசேகர், மண்டல செயலாளர் டி.சற்குணம், மாவட்ட பொறுப்பாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சிவக்குமார், நாகமாணிக்கம், மருதமுத்து, தீபன். அணிபிரிவுத் தலைவர்கள் சி.சந்துரு, மெய்யப்பன், ஆர்.பத்மநாதன், சண்முகசுந்தரம், ரவீந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், மகளிர் அணி மண்டல தலைவர் கே.கலாமணி, துணைத்தலைவர் பொ.சரண்யா, பி.பிரேமா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×