search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம்
    X

    கோத்தகிரியில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம்

    • விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும்
    • கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும்,

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகளுக்கான கடன் அட்டை முகாம் நடந்தது. முகாமில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். இம் முகாமினை முழுமையாக பயன்படுத்தி தகுதியுள்ள விவசாயிகள் அனைவரும் வங்கி கடன் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா கோத்தகிரி தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் ஆவின் மருத்துவர் மற்றும் கால்நடை மருத்துவர் கோத்தகிரி சார்ந்தோர் கலந்து கொண்டனர். தங்கள் துறையில் கிசான் கடன் அட்டை மூலம் கால்நடைகளுக்கான கடன் பெறுவது பற்றி எடுத்துரைத்தனர். இம்முகாமில் கோத்தகிரி வட்டாரத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 175 விவசாயிகள் கடன் அட்டை பேருக்காக பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். மேலும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் கிசான் அடையாள அட்டை பெற்று பயன் பெற வேண்டும், அதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×