என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூரில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்15 July 2022 9:09 AM GMT
- கடலூரில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர்.
கடலூர்:
அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடலூர் மாநகராட்சி சாலை ஓரத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது அ.தி.மு.க.வினர் வாகனத்தை மறித்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X