என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
- ஓட்டேரியில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சிறுபான்மை அணி கிருஷ்ணராஜசேகர், டில்லிகுமார், சுரேஷ், ஜெயகோபாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வண்டலூர் அருகே ஓட்டேரியில் பள்ளி அருகில் உள்ள டாஸ்மாக் கடை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் டேனியல் தலைமை தாங்கினார். இதில் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் சா. நடராஜன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் ஹுசேன்பாய் மற்றும் சிறுபான்மை அணி கிருஷ்ணராஜசேகர், டில்லிகுமார், சுரேஷ், ஜெயகோபாலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story