search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு
    X

    குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

    • குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது குறித்து விளக்கப்பட்டது.
    • என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஊட்டி:

    குன்னூர் நகராட்சி பொதுச் சுகாதாரப் பிரிவு சார்பாக, தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களுக்கான தூய்மை மக்கள் இயக்கம் என்ற விழிப்புணர்வு முகாம் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என அவரவர் வீடுகளிலும், பள்ளி வளாகத்திலும் தரம்பிரிப்பது எவ்வாறு என்று செய்முறை விளக்கமும் மாணவ- மாணவிகளிடையே விளக்கி விழிப்புணர்வு ஏற்பத்தப்பட்டது.

    என் குப்பை என் பொறுப்பு என்ற பதாகைகளை மாணவ- மாணவிகள் ஏந்தி தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.முகாமில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்த விழிப்புணர்வும் மற்றும் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்தும் செய்முறை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×