லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யபட்டார் அவரிடம் இருந்து ரூ.6,200-ஐ பறிமுதல் செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீசாருக்கு அப்பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பழைய தெருவை சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகன் பாரி(வயது 23), தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாரியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.6,200-ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com