search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    17 வயது சிறுமி கர்ப்பம்
    X

    17 வயது சிறுமி கர்ப்பம்

    • பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமி கர்ப்பம்
    • சிறுமிக்கு கருகலைப்பு செய்த 2 பேர் கைது

    அரியலூர்,

    அரியலூர் மலத்தான்குளம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் முத்துசாமி (வயது 48). கடந்த டிசம்பர் மாதம் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் அச்சிறுமி 4 மாத கர்ப்பமான நிலையில் அவருக்கு கடந்த 13-ந்தேதி, விழுப்பணங்குறிச்சியில் உள்ள மணிமேகலை என்பவர் வீட்டில் கட்டாய கருகலைப்பு மாத்திரை கொடுத்துள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே இது குறித்து அச்சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து அச்சிறுமியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணியம்மாள் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து முத்துசாமியை கைது செய்தார். மேலும் அவருக்கு துணையாக இருந்து மணிமேகலையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×