திருவள்ளூரில் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து- மாணவன் பலி

திருமண மண்டபம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமானது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
லிஃப்ட் விபத்து
லிஃப்ட் விபத்து
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திடீரென லிஜ்ப்ட் அறுந்து விழுந்தது. இதில், லிஃப்டிற்குள் இருந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரணடு பேர் காயமடைந்துள்ளனர்.

உணவு பொருட்களை எடுத்துச் செல்லும்போது லிஃப்டின் இரும்பு கயிறு அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், திருமண மண்டபம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமானது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com