அ.தி.மு.க. கொடியுடன் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் சசிக்கலா

வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார். சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது.
அ.தி.மு.க. கொடியுடன் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் சசிக்கலா
Published on

தென்காசி:

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று மாலை தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இரவு வரையிலும் தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து குற்றாலம் சென்று ஓய்வெடுத்தார்.

இந்நிலையில் 2-வது நாளான இன்று மாலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரானூர் பார்டரில் சசிகலா தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

தொடர்ந்து செங்கோட்டை, விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, நயினாகரம், இடைகால், கடையநல்லூர், திரிகூடபுரம் வழியாக சொக்கம்பட்டியில் இன்றைய சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். இன்று மொத்தம் 17 இடங்களில் சசிகலா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.

நேற்று தனது முதல் நாள் பயணத்தின்போது சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு புறப்பட்டார். சசிகலா தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் சசிகலாவின் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாகனங்களிலும் அ.தி.மு.க. கொடிகளே கட்டப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com