என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • திரளான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்

    ஊட்டி:

    மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு செயலாளர் கே.ஆர். அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, கூடலூர் எம்.எல்.ஏ. பொன்ஜெயசீலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளா் கப்பச்சி வினோத் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னா் சொத்து வரி, மின் கட்டண உயா்வு உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக விலை உயா்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் வேதனையடைந்து வருகின்றனா். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு முடக்க முயற்சித்து வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தின் சாா்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து இலவச மின் திட்டங்களையும் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான அக்கீம்பாபு, குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கடநாடுகுமார், பேரட்டிராஜி, ஒசிஎஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுனர்அணி நகர செயலாளரும், நொண்டிமேடு கிளை செயலாருமான கார்த்திக், கிளை செயலாளர் பிரபுதுர்கா, நகரமன்ற உறுப்பினர்கள் லயோலோ குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×