சின்னமனூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.
அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.
Published on

சின்னமனூர்:

சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தலைமையில் எம்.ஜி.ஆர். அணி தேனி மாவட்ட இணை செயலாளர்பிச்சைக்கனி முன்னிலையில், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

இதில் சின்னமனூர்நகர் அவைத்தலைவர் இளநீர்ராமர், தேனி மாவட்ட பிரதிநிதி மதிவாணன், வக்கீல்பரிவு பொறுப்பாளர்ஜெகன்ராஜ் மற்றும் சின்னமனூர் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com