search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில்  அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சேரன்மகாதேவியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏவை, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    சேரன்மகாதேவி:

    அம்பை சட்டமன்ற உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா எம்.எல்.ஏவை, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையொட்டி சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் அ.தி.மு.கவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மகாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனி குமார், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், உச்சிமாகாளி, நகரதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், இளைஞர் அணி செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×