என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்கால் திரு.பட்டினத்தில் சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது
- போலீசார் விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
- தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட மேலவாஞ்சூர் பகுதியில், திரு.பட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது37), சத்யராஜ் (27) என்பதும், 2 பேரும் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயத்தை கடத்திச் சென்று விற்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்து, மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்