

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. அந்த கடையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உரிமையாளர் விளம்பரம் செய்தார். இது தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அந்த தொழிற்சாலை மற்றும் கடையில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மருத்துவத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று அந்த தொழிற்சாலை மற்றும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.