கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், டிங்கோ சிங்

முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங், தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பி உள்ளார்.
டிங்கோ சிங்
டிங்கோ சிங்
Published on

புதுடெல்லி:

ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவரான முன்னாள் குத்துச்சண்டை வீரர் மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்காக டெல்லி சென்று விட்டு திரும்பிய போது அவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார்.

இதையடுத்து இம்பாலில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த மே மாத இறுதியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது அவ்வப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 முறை அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்யும் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்தது. தொடர்ச்சியான சிகிச்சையால் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து ஒரு மாதம் கழித்து வீடு திரும்பி உள்ளார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது, அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன்பட்டுள்ளேன் என்று 41 வயதான டிங்கோ சிங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com