உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்

தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு வலு சேர்ப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும். இன்று தூதுவளை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உடலுக்கு வலு சேர்க்கும் தூதுவளை சூப்
Published on

தூதுவளை இலைகள் - 20,
கொத்தமல்லித்தழை - சிறிது,
சின்ன வெங்காயம் - 5,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
முழு பூண்டு - 4 பல்,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்.

கொத்தமல்லி, தூதுவளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லித்தழை, தூதுவளை இலையை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கி இறக்கவும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சூடாக இருக்கும் போதே மிளகுத்தூளை தூவி பரிமாறவும்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com