முதுகு வலி வராமல் இருக்க மூலாதார தியானம்

இந்த தியானத்தை காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யவும். இதன் பலன் அளவிடற்கரியது. அடிமுதுகு நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்கும்.
மூலாதார தியானம்
மூலாதார தியானம்
Published on

விரிப்பில் நிமிர்ந்து கிழக்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூன்று முதல் ஐந்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை முதுகு தண்டின் அடி உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்த இடத்தில் நல்ல பிராண சக்தி கிடைப்பதாக எண்ணி தியானிக்கவும். உங்களது மூச்சோட்டத்தை அந்த இடத்தில் தியானிக்கவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

இந்த தியானத்தை காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யவும். இதன் பலன் அளவிடற்கரியது. கோனாடு சுரப்பி நன்றாக இயங்கும். சிறுநீரகம் சிறப்பாக இயங்கும். அடி முதுகு வலி வராமல் பாதுகாக்கப்படுகின்றது. அடிமுதுகு நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக இயங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com