மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்

மாணவர்கள் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும். மாணவர்கள் நேர்மையுடன் செய்யும் பண்பு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள்
Published on

கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை உயர்வாக எண்ணி மதிப்பளித்தல் மற்றும் அவர்களுடன் சிறந்த முறையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களிடம் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை தைரியத்துடன் கேட்டு தெளிவடையும் பண்பு கொண்டவராகவும் காணப்படுதல் வேண்டும்.

மாணவர்கள் எந்த செயலையும் நேர்மையுடன் செய்யும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும். பிற உயிர்கள் மீது அன்பு, கருணை பண்பு கொண்டவராக மாணவர்கள் காணப்படுதல் வேண்டும். இது சிறந்த பிரஜையாக அவர்கள் மாறுவதற்கு பெரிதும் உதவுகிறது. மாணவர்கள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் நேர்மையாக பயன்படுத்தி தமது திறமைகளை வழிகாட்டும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.

மாணவர்கள் பாடசாலை சட்டதிட்டங்களையும், அரசியல் சட்ட திட்டங்களை அறிந்து அவற்றிற்கு மதிப்பளித்து அதற்கு உட்பட்டு நடக்கும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும். சமத்துவ பண்பு உடையவராக காணப்படுதல் மாணவர்களிடம் காணப்பட வேண்டிய முக்கியமான பண்புகளில் ஒன்றாகும்.

நேரமுகாமைத்துவம் என்பது கல்வி பயிலும் மாணவர்களிடையே இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாக காணப்படுகிறது.

மாணவர்கள் தமது அனைத்து வேலைகளை சரிவர திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும் தன்மை கொண்டவராக காணப்படுதல் வேண்டும். சிறந்த மாணவன் தம்மை விட வயதில் மூத்தவர்கள், இளையவர்கள், வயோதிபர்கள் ஆகியோர்களுக்கு சரியான முறைகளில் மதிப்பளித்து உதவிகள் புரியும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. பிறருடன் பேசும் விதம், சமூகத்தில் நடந்து கொள்ளும் விதம், கலாசாரம், நடத்தை என்று அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com