search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இன்று மாத சிவராத்திரி: விரதம் கடைப்பிடிப்பது எப்படி?
    X

    இன்று மாத சிவராத்திரி: விரதம் கடைப்பிடிப்பது எப்படி?

    • சிபெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம்.
    • மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம்.

    சிபெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம். மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மகாசிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வருடத்திற்கு 12 சிவராத்திரிகள் வருகின்றன. இவற்றில் 6 சிவராத்திரிகள் தேய்பிறையிலும், 6 சிவ ராத்திரிகள் வளர்பிறையும் வருகின்றன. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி விரதம் ஐந்து வகைகளில் உள்ளதாகவும், மாத சிவராத்திரி விரதங்களை பற்றி மாதசிவராத்திரி விரத கல்பம் என்னும் நூல் விரிவாக சொல்லுகிறது.

    விரதம் கடைபிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரம் வருமாறு:

    சித்திரை மாதம் - உமாதேவி

    வைகாசி மாதம் - சூரியபகவான்

    ஆனி மாதம் - ஈசன்

    ஆடி மாதம் - முருகன்

    ஆவணி மாதம் - சந்திரன்

    புரட்டாசி மாதம் - ஆதிசேஷன்

    ஐப்பசி மாதம் - இந்திரன்

    கார்த்திகை மாதம் - சரஸ்வதி

    மார்கழி மாதம் - லட்சுமி

    தை மாதம் - நந்தி

    மாசி மாதம் - தேவர்கள்

    பங்குனி மாதம் - குபேரன்

    மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

    Next Story
    ×