search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பல்லக்கு, கருட வாகனங்களில் கல்யாணவெங்கடேஸ்வரர் உலா
    X

    பல்லக்கு, கருட வாகனங்களில் கல்யாணவெங்கடேஸ்வரர் உலா

    • 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை.
    • வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    திருமலை:

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகன சேவை, இரவு கருடவாகன சேவை நடந்தது. அதில் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

    விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லக்கு வாகனத்துக்கு அருகில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உடன் வந்தார்.

    வாகனங்களுக்கு முன்னால் பக்தி பஜனைகளை பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பெண்களும், ஆண்களும் கோலாட்டம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து சிறப்பு கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×