search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    கூத்தப்பர் காளி கோவில்- திருச்சி
    X

    கூத்தப்பர் காளி கோவில்- திருச்சி

    • இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள்.
    • ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.

    சுவாமி : கூத்தப்பர் காளி.

    தீர்த்தம் : அம்பாள் தீர்த்தம்-காளியாறு,சிவதீர்த்தம்-சிவகங்கை பாதாள கங்கை.

    தலவிருட்சம் : மஹா வில்வம்.

    தலச்சிறப்பு : உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்திலும்,ஸ்ரீ காளீஸ்வரி 54 ¼ அடி விஸ்வரூப தரிசனம் தருகிறார்கள்.விஸ்வரூப மஹாகாலீஸ்வரியின் திருப்பாதத்தின் கீழ் உள்ள பதினாறு படிகளும் பதினாறு செல்வங்களாக அமைந்துள்ளது.

    இத்திருப்படியின் கீழ் உள்ள அறையில் கால ஜோதி சுடர் வீசிப் பிரகாசிக்கிறது. இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள்.சக்தியினுடைய பஞ்ச பேதங்களையும் குறித்து ஐந்து சக்திகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இச்சா சக்திமஹாகாலேஸ்வரி,கிரியாசக்தி ப்ரத்யங்கிராதேவி,ஞானசக்தி குஹ்யகாளி,ஞானசக்தியின் திருமுன் ஞானலிங்கம்,பராசக்தி சிவமாயாதேவி,ஆதிசக்தி அரூப நிலையில் வனகாளியாகவும் உள்ளனர்,அஷ்ட காளிகள் பத்து பைரவர்கள் உள்ளனர்.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை, மதியம் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

    அருகிலுள்ள நகரம் : திருவெறும்பூர்.

    கோயில் முகவரி : கூத்தப்பர் காளி கோவில்,கூத்தைப்பார், திருச்சி மாவட்டம்.

    Next Story
    ×