search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக அரை சதம்  விளாசி அவுட்டனார் சர்பராஸ் கான்
    X

    அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிவேக அரை சதம் விளாசி அவுட்டனார் சர்பராஸ் கான்

    • இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்
    • 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி அதிவேக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 33 ரன்கள் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால் (10), கில் (0), படிதார் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன் என்ற நிலையில் ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 196 பந்துகளில் 131 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

    அதன் பின்னர் களமிறங்கிய சர்பராஸ் கான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். அப்போது அவரின் தந்தையும், மனைவியும் கைதட்டி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பின்னர் 66 பந்துகளில் 62 ரன்கள் அடித்திருந்த சமயத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார் சர்பராஸ் கான்.

    ஹர்திக் பாண்டியா தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது சர்பராஸ் கான் 48 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    உள்ளூர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இந்த அணியில் அவர் இடம்பிடிக்க போராடி வந்தார்.

    இந்த நிலையில்தான் தற்போது ராஜ்கோட் டெஸ்டில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல் ராகுல் ஆகியோர் விலகிய நிலையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 26 வயதாகும் சர்பராஸ் கான் 45 முதல்தர போட்டிகளில் 14 சதம், 11 அரைசதங்கள் அடித்துள்ளார். 301 நாட்அவுட் அதிகபட்ச ஸ்கோராகும்.

    Next Story
    ×