மே 22-ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் "வாரண்ட்"

இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார்.
மே 22-ல் ஓடிடி தளத்தில் வெளியாகும் "வாரண்ட்"
Published on

விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகும் புதிய தொடர் (சீரீஸ்) வாரண்ட்.

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார்.

இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர்.

‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை மெதுவாக ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தையும் காட்டுகிறது.

இந்தக் கதை, கோட்டை கருப்புசாமி என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவரின் அமைதியான அவமானங்களும் பயமும், அவர் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறார் என்பதைக் கட்டமைக்கின்றன.

இதன் மூலம் அதிகாரம், ஆட்சித்தன்மை மற்றும் நீதி எப்போது மங்குகிறது என்பதைக் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

இந்த தொடர் ZEE5-ல் இம்மாதம் 22ம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com