விஜய் வெற்றி.. பார்த்திபன் சொன்ன பஞ்ச்!

வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ’happy birthday’சொல்வதைப்போல..
விஜய் வெற்றி.. பார்த்திபன் சொன்ன பஞ்ச்!
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வென்றுள்ளது.

தவெக வெற்றிக்கு அதன் தலைவர் விஜய்க்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,

"வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, ’happy birthday’சொல்வதைப்போல,

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது!

விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால், ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில் முதல்வராக அமர, திரு விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com