என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இளைஞர்கள் போதைபொருளுக்கு பதிலாக விளையாட்டில் ஆர்வம் காட்டவேண்டும்- கார்த்தி அறிவுரை
- போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு விழிப்புணர்வு அறிவுரை கூறினார்.
போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க காவல் துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர் என்பது வருத்தமாக இருக்கிறது.
நிறைய வீரம் இருக்கிறது, அந்த வீரத்தை எங்கு காண்பிப்பது இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா அதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று எல்லாரும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். ஆனால், இது கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போய் கொண்டிருக்கிறது. போதைபொருள் மூளையை மழுங்கடித்து விடுகிறது. சிந்தனை இல்லாமல் போய்விடுகிறது. நாம் பயன்படுத்தும் ஒயிட்னர் வரைக்கும் போதைபொருள் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் கடைகளில் கிடைக்கிறது. பள்ளி அருகே விற்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள்தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள்தான். ஆக, நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்" என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்