என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அம்மாவாக ப்ரோமோட் ஆனார் ராதிகா ஆப்தே - புகைப்படங்கள் வைரல்
    X

    அம்மாவாக 'ப்ரோமோட்' ஆனார் ராதிகா ஆப்தே - புகைப்படங்கள் வைரல்

    • லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    • கருவுற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றினார்.

    பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவர் லண்டனை சேர்ந்த பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'சிஸ்ட்ர் மிட்நைட்' திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கருவுற்று இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கருவுற்ற பிறகு முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருப்பதை அடுத்து ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிஸ்டர் மிட்நைட் யு.கே. பிரீமியர்" என்று மட்டும் குறிப்பிட்டு நிகழ்வில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளார். தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×