‘ஜன நாயகன் ரிலீஸில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பேச எனக்கு தைரியமில்லை’ - இயக்குநர் ஹெச். வினோத்

ரிலீஸில் உள்ள சிக்கலை சொன்னால், அதனை அப்படியே போடும் தைரியம் ஊடகங்களுக்கு இல்லை.
‘ஜன நாயகன் ரிலீஸில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பேச எனக்கு தைரியமில்லை’ - இயக்குநர் ஹெச். வினோத்
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவானப் படம் ஜன நாயகன். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரியே ரிலீஸுக்கு தயாரான நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.

நடிகர் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே ஆகிவிட்டார். இருப்பினும் அந்த பிரச்சனை தீர்ந்தவாறு இல்லை.

இந்நிலையில் இயக்குநர் வினோத் செல்லும் இடங்களில் எல்லாம் அவரிடம் இப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் ஜன நாயகன் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

“அது என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்”. இவ்வாறு கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com